தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள்
டிசம்பர் 27, 30ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

 

இந்நிலையில், தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும்.

 

போலீசார் அனுமதி பெற்று ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும். பொது, தனியார் சுவர்களில் பிரசார விளம்பரம் செய்யக் கூடாது. தனியாரிடம் அனுமதி பெற்று இருந்தாலும் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது