COVID 19 தொற்றுநோய் தடுப்பு பணிக்காக ராணிப்பேட்டை, வேலூர் திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டத்திற்க்கு தமிழக அரசால் COVID 19 தொற்றுநோய் தடுப்பு பணிக்காக நியமனம் செய்யப்பட்ட கண்காணிப்பு அலுவலர் மங்கத் ராம் சர்மா அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரொனா பாதிக்கப்பட்டு லாக்டவுன் பகுதியான மேல்விஷாரம் மற்றும் ஆற்காடு பகுதிகளில் பார்வையிட்ட அவர் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களிடம் தற்போது நிலைகுறித்து கேட்டரிந்தார்.. அதைதொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு மேற்கொண்ட அவர் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் மருத்துவர்களிடம் தற்போது நிலை குறித்து கேட்டறிந்தார் இந்த ஆய்வின் போது ராணிப்பேட்டை. மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி. ராணிப்பேட்டை சார் ஆட்சியர் க.இளம்பகவத் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன். அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கீதா ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார அலுவலர் வேல்முருகன், டாக்டர் பிரகாஷ் ஐயப்பன் ஆகியோர் உடனிருந்தனர்..
கண்காணிப்பு அலுவலர் மங்கத் ராம் சர்மா அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆய்வு